logo

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு 'செயற்திட்ட விளக்கம்' அளிக்கிறது இலங்கை

Published By: Digital Desk 5

29 Mar, 2023 | 09:26 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைத் தொடர்ந்து அரசாங்கமானது இன்றைய தினம் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிகழ்நிலை முறைமையின் ஊடாக தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய செயற்திட்ட விளக்கத்தை (ப்ரசென்டேஷன்) அளிக்கவுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த 20 ஆம் திகதி அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து இலங்கையின் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் (30) நிகழ்நிலை முறைமையின் ஊடாக செயற்திட்ட விளக்கத்தை அளிக்கவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி பி.ப 6 மணிக்கு (நியூயோர்க் - நண்பகல் 12.30 மணி, லண்டன் - பி.ப 1.30 மணி, பெய்ஜிங் - இரவு 8.30 மணி) இடம்பெறவுள்ள இந்நிகழ்நிலை சந்திப்புக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.

இதன்போது கடந்த 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதியளிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் மற்றும் அதன் பிரதான இலக்குகள் குறித்தும், கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் நிதியமைச்சு, 'சர்வதேச நாணய நிதியச்செயற்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கான முழுமையான கடப்பாட்டை இலங்கை கொண்டிருக்கின்றது. 

அதன்படி நிதி ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தல், வரிவருமானத்தை அதிகரித்தல், வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பல், செயற்திறனான பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்தல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் இலங்கை தொடர்ந்தும் அதன் கடன்வழங்குனர்களுடன் மீயுயர் நம்பிக்கையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கும், நாட்டின் கடன்நெருக்கடிநிலைக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளது' என்று தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27