(எம்.மனோசித்ரா)
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய புதன்கிழமை (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இவ் அறிவிப்பையடுத்து , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சமாந்தரமாக தாமும் விலைகளைக் குறைப்பதாக ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளது.
மின்சக்தி அமைச்சில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 400 ரூபாவிலிருந்து 340 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் விலை 405 ரூபாவிலிருந்து 325 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 510 ரூபாவிலிருந்து 375 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
வழமையான செயற்பாடுகளுக்கமைய ஏப்ரல் முதல் வாரத்திலேயே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் இதனை எதிர்பார்த்துள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முற்பதிவுகளை செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஓரிரு தினங்களுக்கு முன்னதாகவே விலை திருத்தத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய மே மாதம் முதலாம் வாரத்தில் மீண்டும் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM