logo

எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளமைக்கு எதிர்க்கட்சி வரவேற்பு

Published By: Digital Desk 5

29 Mar, 2023 | 09:15 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இது குறித்து முற்போக்காக சிந்திக்க வேண்டும். 

இதன் மூலம் எரிபொருள் சந்தையில் போட்டி நிலைமை அதிகரிக்கும் போது , நுகர்வோருக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை சாதகமான நடவடிக்கையாகும். எனினும் மே மாதம் மீண்டும் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது தற்போது குறைக்கப்பட்டுள்ள அதே மட்டத்தில் விலைகளை அதிகரிக்கக் கூடாது. மாறாக சமநிலையானதொரு விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை நாம் முற்போக்காக சிந்திக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் 1960களில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டன. எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் அவற்றுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே இந்நிறுவனங்கள் சிங்கப்பூரில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுக்க ஆரம்பித்தன. இதன் பிரதிபலனாக துளியளவும் எரிபொருள் வளமற்ற நாடான சிங்கப்பூர் எரிபொருள் விநியோக கேந்திரமாக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

குறித்த நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் போது போட்டி அதிகரிக்கும். எனவே எரிபொருள் விலை மற்றும் தட்டுப்பாடு இன்மை போன்று சாதகமான நலன்கள் நுகர்வோருக்கு கிடைக்கப்பெரும். 

இவ்வாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27