logo

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம்  இலங்கையிலும்  உருவாக்கப்பட வேண்டும் - பொதுஜன பெரமுன

Published By: Vishnu

29 Mar, 2023 | 09:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)


இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு தொடர்பான சட்டம் உருவாக்கப்படுவதை அதிஷ்டமாக கருதுகிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.போராட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.


பொருளாதார மேம்பாட்டுக்கும்,அத்தியாவசிய சேவைத்துறைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட வேண்டிய தேவையில்லை,நாட்டு மக்களே அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்.இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.


ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக அக்காலப்பகுதியில் ஊழல்கள் வலுப்பெற்றன.ராஜபக்ஷர்கள் திருடர்கள்,அரச நிதியை மோசடி செய்தார்கள் என அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.


ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த சட்டம் இயற்றப்படும்.ஊழல் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்குவதை அதிஷ்டமாக கருதுகிறோம்.


சேறு பூசும் வகையிலான அரசியல் பிரசாரங்களுக்கு எதிராக இந்திய நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் தவறான கருத்தை வெளியிட்டார்.

இதற்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது,ஆகவே இந்த தண்டனை ஏற்பாட்டை இயற்றப்படவுள்ள ஊழல் ஒழிப்பு சட்டத்திற்கு உள்வாங்க வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நாட்டில் இயல்பானதொரு விடயமாகி விட்டது.சிறந்த மாற்றத்திற்காக கடுமையான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27