(நெவில் அன்தனி)
சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் தனது 197ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.
லீச்டென்ஸ்டீன் அணிக்கு எதிராக நடைபெற்ற 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.
மேலும், போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆற்றல் மங்கிவிடவில்லை என்பதை இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் நிரூபீத்துள்ளார்.
பெரும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்த கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் பின்னர் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெற்ற ரொனால்டோ, தனது முதல் இரண்டு போட்டிகளில் தலா 2 கோல்களைப் போட்டு அசத்தினார்.
உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் சவூதி அரேபிய கால்பந்தாட்ட கழகம் ஒன்றில் இணைந்த ரொனால்டோ, 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் அசத்தி வருவதுடன் சர்வதேச கால்பந்தாட்டத் தரம் தன்னிடம் தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை நிரூபித்துள்ளார்.
லக்ஸம்பேர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் ஈட்டிய 6 - 0 என்ற வெற்றியில் ரொனால்டோ 2 கோல்களைப் போட்டதுடன், லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியில் ஈட்டிய 4 - 0 என்ற வெற்றியிலும் அவர் 2 கோல்களைப் போட்டிருந்தார்.
லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியானது சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய சாதனைமிகு 197ஆவது சர்வதேச போட்டியாகும்.
இதன் மூலம் அதிகளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மகிழ்ச்சி தருகிறது என போர்த்துக்கல் அணித் தலைவர் ரொனால்டோ தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.
'எமது தேசிய அணி சாதகமான பெறுபெறுகளை ஈட்டியமை மகிழ்ச்சி தருகிறது. இங்கிருந்து முன்னோக்கி நகர்வோம்' என சமூக ஊடகத்தில் கூறியிருந்தார்.
கத்தாரில் கடந்த வருடம் நடைபெற்ற மொரோக்கோவுக்கு எதிரான உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் தோல்வி அடைந்து வெளியேறியபோது ரொனால்டோ கண்ணீர் சிந்தியவாற அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்.
அதன் பின்னர் இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் போர்த்துக்கல் வெற்றிபெற்றது ரொனால்டோவுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துள்ளது.
பெரும் ஏமாற்றத்தைத் தந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தேசிய அணியில் விளையாடக் கிடைக்குமா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் பெருந்தொகை பணத்திற்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியிருந்தார்.
எனினும் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பிடித்த ரொனால்டோ 2 போட்டிகளில் 4 கோல்களைப் போட்டு தனது திறமை மங்கவில்லை என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM