logo

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

Published By: Digital Desk 5

28 Mar, 2023 | 05:28 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் தனது 197ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.

லீச்டென்ஸ்டீன் அணிக்கு எதிராக நடைபெற்ற 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.

மேலும், போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆற்றல் மங்கிவிடவில்லை என்பதை இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் நிரூபீத்துள்ளார்.

பெரும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்த கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் பின்னர் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெற்ற ரொனால்டோ, தனது முதல் இரண்டு போட்டிகளில் தலா 2 கோல்களைப் போட்டு அசத்தினார்.

உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் சவூதி அரேபிய கால்பந்தாட்ட கழகம் ஒன்றில் இணைந்த ரொனால்டோ, 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் அசத்தி வருவதுடன் சர்வதேச கால்பந்தாட்டத் தரம் தன்னிடம் தொடர்ந்தும் இருக்கின்றது  என்பதை  நிரூபித்துள்ளார்.

லக்ஸம்பேர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் ஈட்டிய 6 - 0 என்ற வெற்றியில் ரொனால்டோ 2 கோல்களைப் போட்டதுடன், லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியில் ஈட்டிய 4 - 0 என்ற வெற்றியிலும் அவர் 2 கோல்களைப் போட்டிருந்தார்.

லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியானது சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய சாதனைமிகு 197ஆவது சர்வதேச போட்டியாகும்.

இதன் மூலம் அதிகளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மகிழ்ச்சி தருகிறது என போர்த்துக்கல் அணித் தலைவர் ரொனால்டோ தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

'எமது தேசிய அணி சாதகமான பெறுபெறுகளை ஈட்டியமை மகிழ்ச்சி தருகிறது. இங்கிருந்து முன்னோக்கி நகர்வோம்' என சமூக ஊடகத்தில் கூறியிருந்தார்.

கத்தாரில் கடந்த வருடம் நடைபெற்ற  மொரோக்கோவுக்கு எதிரான  உலகக் கிண்ண  கால் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் தோல்வி அடைந்து வெளியேறியபோது ரொனால்டோ கண்ணீர் சிந்தியவாற அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்.

அதன் பின்னர் இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் போர்த்துக்கல் வெற்றிபெற்றது ரொனால்டோவுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துள்ளது.

பெரும் ஏமாற்றத்தைத் தந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தேசிய அணியில் விளையாடக் கிடைக்குமா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் பெருந்தொகை பணத்திற்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியிருந்தார்.

எனினும் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பிடித்த ரொனால்டோ 2 போட்டிகளில் 4 கோல்களைப் போட்டு தனது திறமை மங்கவில்லை என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14இன் கீழ் சமபோஷ பாடசாலைகள் கால்பந்தாட்டம்...

2023-06-10 10:56:20
news-image

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் -...

2023-06-09 20:36:53
news-image

இந்தியா 296 ஓட்டங்களுடன் சுருண்டது; ரஹானே,...

2023-06-09 20:15:07
news-image

சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்செய்த ஸ்கொட்பொலன்டின் பந்து...

2023-06-09 14:29:31
news-image

அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில்...

2023-06-09 07:39:23
news-image

உலகக் கிண்ண தகுதிகாண் இலங்கை குழாத்தில்...

2023-06-08 20:15:49
news-image

கிரிக்கெட் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி...

2023-06-08 20:15:31
news-image

எமது பயணம், எமது நம்பிக்கை கருப்பொருளில்...

2023-06-08 15:48:55
news-image

அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்தில் இணைவதாக...

2023-06-08 09:40:54
news-image

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஹெட்,...

2023-06-08 06:20:32
news-image

ரிட்ஸ்பறி விதுதய நீச்சல் சம்பியன்ஷிப்: புனித...

2023-06-07 21:18:13
news-image

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய...

2023-06-07 21:19:45