(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (27) கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரில் இருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தியில் கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் குழியில் தவறி விழுந்துள்ளனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கழிவகற்றல் குழியில் தவறி விழுந்துள்ள நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு முயன்ற மற்றைய நபரும் குழிக்குள் தவறி விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM