அகில இலங்கை ரீதியில் பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற ஊடக படைப்பாக்க போட்டிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
8 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 40 இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவு வென்று சாதனை படைத்துள்ளது.
ஹெல்வெற்றாஸ் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அனுசரணையில், இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பேராதனை பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பன பங்குபற்றியிருந்தன.
துறைசார் நிபுணர்களாலும், ஊடகத் தொழில்வாண்மையாளர்களாலும் சுமார் ஒரு வருடமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்ட செயலமர்வுகள், பயிற்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து, 4 பல்கலைக்கழகங்களிடையே இப்போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.
பல்லூடக கட்டுரைகள், வலைப்பூக்கள், மொபைல் புகைப்படங்கள், டிஜிட்டல் கெமரா புகைப்படங்கள், கருத்துப் படங்கள் மற்றும் டூடுள் சித்திரங்கள், மொபைல் வீடியோ கதை சொல்லல், குறும்படங்கள், டிஜிட்டல் நாடகங்கள் ஆகிய எட்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தலா 5 போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், 6 போட்டிகளில் மூன்றாம் இடங்களையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவு மாணவர்கள் வெற்றி கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 5 இடங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளில் டிஜிட்டல் கெமரா புகைப்படங்கள், கருத்துப் படங்கள் மற்றும் டூடுள் சித்திரங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அனைத்து இடங்களையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களே கைப்பற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் நேரடியாக பங்குபற்றிய மாணவர்கள், தாம் பெற்ற விருதுகளுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், விரிவுரையாளர்கள் தினேஷ் கொடுதோர், அனுதர்ஷி கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM