(எம்.எம்.சில்வெஸ்டர்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துமாறு தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஆராய்வதற்கான திகதி வெளியிடப்பட்டுள்ளது.
சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொலகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
திங்கட்கிழமை (27) குறித்த ரிட் மனு மீதான விசாரணையின்போது, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிடர் ஜெனரல் பிரியன்த்த நாவனவும், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் கருத்துக்களையும் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழு குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியன்று விசாரணைக்கு அழைக்கப்படும் என உத்தரவிட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலை தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படாததனால், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் பொலிஸார் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளபோதிலும், அது குறித்து எதுவிதுமான செயற்பாடுகளும் எடுக்கப்படாமல் இருப்பதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM