தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், 'கொன்றால் பாவம்' எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் இயக்குநராக அறிமுகமானவருமான தயாள் பத்மநாபன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'.
இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஆரவ், சந்தோஷ் பிரதாப், மகத் ராகவேந்திரா, விவேக் ராஜகோபால், யாசர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல் நிலைய பின்னணியில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு இடையே தொழில் ரீதியான நட்பை கடந்து உருவாகும் உறவை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை 'ஆஹா' டிஜிட்டல் தளத்திற்காக டி பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக்கில் நடிகர் ஆரவ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் காவல் துறை அதிகாரியின் உடையில் தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM