சீ.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான றக்பி போட்டி

Published By: Vishnu

26 Mar, 2023 | 08:42 PM
image

(நெவில் அன்தனி)

12 பாடசாலை அணிகள், 8 பிரதான கழக அணிகள், 2 வெளிநாடுகள் உட்பட 6 பெண்கள்  அணிகள்

இலங்கையின் பழைமையான றக்பி கழகங்களில் ஒன்றான சிலனீஸ் றக்பி அண்ட் புட்போல் கிளப்பின் (Ceylonese Rugby & Football Club) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அழைப்பு றக்பி போட்டியில் 12 பாடாசலை அணிகள், 8 பிரதான கழகங்கள், 6 மகளிர் கழகங்கள் பங்குபற்றுகின்றன. மகளிர் போட்டியில் அவுஸ்திரேலியா, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு அணிகள் பங்குபற்றுகின்றமை சிறப்பம்சமாகும்.

அவுஸ்திரேலியாவிலிருந்து புரானியர் பெண்கள் றக்பி கழகமும் கத்தாரிலிருந்து தோஹா பெண்கள் றக்பி கழகமும் இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.

இலங்கை றக்பி வரலாற்றில் பாடசாலை அணிகள், ஆண்கள் பிரிவில் பிரதான கழகங்கள், பெண்கள் பிரிவில் 2 வெளிநாட்டு அணிகள் உட்பட 6 கழகங்கள் ஒரே போட்டியில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை என  சிலனீஸ்  றக்பி அண்ட் புட்போல் கிளப் தலைவர் டெட் முத்தையா தெரிவித்தார்.

இந்த வரலாற்று முக்கியம்வாய்ந்த சுற்றுப் போட்டியை பிரமாண்டமான வகையில் களியாட்டங்கள், கொண்டாட்டங்களுடன் நடத்தவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டில்ரோய் பெர்னாண்டோ கூறினார்.

இப் போட்டிகள்  சீ.ஆர். மைதானத்தில் மார்ச் 31ஆம், ஏப்ரல் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறும்.

பாடசாலைகளுக்கு இடையிலான லீக் சுற்றும், கால் இறுதிகள் மற்றும் அரை இறுதிகள் வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி நடைபெறும். ஆண்களுக்கான கழக மட்டப் போட்டிகளும் பெண்களுக்கான கழக மட்டப் போட்டிகளும் சனிக்கிழமை 1ஆம் திகதி நடைபெறும்.

பெண்கள் பிரிவில் 6 கழகங்கள் மாத்திரம் பங்குபற்றுவதால் ஒரே பிரிவில் லீக் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படும். இதன் காரணமாக சனிக்கிழமை (01), 9 போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை (02) 6 போட்டிகளும் நடத்தப்படும்.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பாடசாலைகளுக்கான கிண்ணம் மற்றம் கோப்பை இறுதிப் போட்டிகளும் கழகங்கங்களுக்கு இடையிலான இறுதிச் சுற்றுடன் கிண்ணம் மற்றும் கோப்பைக்கான இறுதிப் போட்டிகளும் நடத்தப்படும்.

பெண்கள் பிரிவில் லீக் சுற்று நிறைவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியிலும் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் கோப்பைக்கான இறுதிப் போட்டியிலும் விளையாடும். கடைசி இரண்டு அணிகள் நிரல்படுத்தலுக்கான இறுதிப் போட்டியில் விளையாடும்.

பங்குபற்றும் அணிகள்

பாடசாலைகள்

குழு ஏ: றோயல், புனித பேதுருவானவர், வெஸ்லி.

குழு பி: பிலியந்தலை மத்திய கல்லூரி, கண்டி திரித்துவம், புனித சூசையப்பர்.

குழு சி: ஸாஹிரா, வித்யார்த்த, இஸிபத்தன.

குழு டி: டி.எஸ். சேனாநாயக்க, கிங்ஸ்வூட், சென் தோமஸ்.

கழகங்கள் (ஆண்கள்)

குழு ஏ: கண்டி, இராணுவம், சி.ஆர். அண்ட் எவ்.சி., பொலிஸ்.

குழு பி: விமானப்படை, ஹெவ்லொக்ஸ், கடற்படை, சீ.எச். அண்ட் எவ்.சி.

கழகங்கள் (பெண்கள்)

விமானப்படை, சீ.ஆர். அண்ட் எவ்.சி., புரானியர் பெண்கள் றக்பி கழகம், இராணுவம், கடற்படை, கத்தார் - தோஹா பெண்கள் றக்பி கழகம்.

மொத்தப் பணப்பரிசு 1875000 ரூபா

பாடசாலைகள் பிரிவில் சம்பியனாகும் அணிக்கு 250,000 ரூபாவும் 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 125,000 ரூபாவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் சம்பியனாகும் அணிகளுக்கு தலா 500,000 ரூபாவும் 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 250,000 ரூபாவும் பணப் பரிசுகளாக வழங்கப்படும்.

(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45
news-image

டோனிஅரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும்...

2023-06-01 12:40:51
news-image

20 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர்...

2023-06-01 09:41:55
news-image

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும்...

2023-05-31 17:32:53
news-image

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி...

2023-05-31 15:26:14
news-image

ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு...

2023-05-31 15:06:31
news-image

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம்...

2023-05-31 09:59:37
news-image

ஆசிய கிண்ண கிரிக்கெட் இழுபறி தொடர்கிறது...

2023-05-31 09:39:26
news-image

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் தொடர்: இலங்கை...

2023-05-30 22:11:44
news-image

மலேஷிய மாஸ்டர்ஸ் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவின்...

2023-05-30 16:37:29