(எம்.வை.எம்.சியாம்)
கண்டி, பல்லேகல சிறைச்சாலை முகாமில் இருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் மகாவலி ஆற்றில் குதித்து, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை சிறைச்சாலை முகாமில் இருந்து தப்பிச் சென்று, மகாவலி ஆற்றில் குதித்தபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பல்லேகல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பல்லேகல பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு நீரில் மூழ்கிய கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM