(ஏ.என்.ஐ)
2019 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டை விட இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டொன்கள் அதிகரித்துள்ளது. ஆண்டு அதிகரிப்பு 39.7 மில்லியன் டொன்களாகும். இது 145.6 மில்லியன் டொன் கார்பன் ஆக்சைடுக்கு சமம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஒரு மரத்தால் கார்பன் சுரக்கும் அளவு மர இனங்கள் உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் இயற்பியல் காரணிகளைப் பொறுத்தது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்திய காடுகளின் அறிக்கை 2021 இன் படி, காட்டில் உள்ள மொத்த கார்பன் இருப்பு 7,204 மில்லியன் டொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 529.47 மில்லியன் டொன் கார்பன் இருப்பு உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் அடங்கும். 2019 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டை விட நாட்டின் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டொன்கள் அதிகரித்துள்ளது.
ஆண்டு அதிகரிப்பு 39.7 மில்லியன் டொன்கள் ஆகும். இது 145.6 மில்லியன் டொன்கள் காபனீரொட்சைட்டுக்கு சமமானதாகும். காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியா உறுப்பினராக உள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6ஐ நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய அளவில் நியமிக்கப்பட்ட ஆணையம் உள்ளது. இது கார்பன் வர்த்தகத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் கீழ் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஆணையைக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM