கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நீரடி ஆயுதமொன்றை தான் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், நேரடியாக இந்த சோதனையை மேற்பார்வை செய்தார் என வட கொரிய ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
தென் ஹம்ஜியோங் மாகாணத்தின் கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ரகசிய ஆயுதக் கலம் கடலில் விடப்பட்டதாகவும், 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணித்தியாலங்கள் இந்த ஆயுத கலம் பயணம் செய்து பின்னர் கிழக்கு கரையோரத்தில் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
ஹேய்ல் என இந்த ஆயுதத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கொரிய மொழியில் சுனாமி என அர்த்தமாகும்.
எந்தவொரு கடற்கரையிலும் துறைமுகத்திலும் இந்த ஆளில்லா கலத்தை பயன்படுத்த முடியும் என கேசிஎன்ஏ மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு அது விலை கொடுக்கச் செய்யப்படும் என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM