logo

ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகள் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - ஹக்கீம்

Published By: Digital Desk 5

24 Mar, 2023 | 03:58 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தால் மாத்திரம் ஊழல்களை தடுத்து விட முடியாது ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகளை ஊழல் ஒழிப்பு  சட்டமூலத்தில் உள்ளடக் வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போது பிரதான பேசுபொருளாக உள்ளது.இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுழற்சியில் உள்வாங்கி 17 ஆவது தடவையாக சென்றுள்ளோம். முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று பின்னர் பின்வாங்கி நெருக்கடியென வரும் போது மீண்டும் போகின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக இருக்கின்றார். நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளதால் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. போராட்டங்களை பொலிஸார். இராணுவத்தை கொண்டு முடக்குகின்றார்.

 சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அந்த சட்டத்தின்மூலம் மாத்திரம் ஊழலை தடுத்துவிட முடியாது. அதில் ஊழல்களால் பெற்றுக்கொண்ட சொத்துக்களை சுவீகரிக்கக்கூடிய ஏற்பாடுகளை உள்ளடக்க வேண்டியுள்ளது.

இதேவேளை புதிய மத்திய வங்கி சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போதும், சில திருத்தங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அரசியல் தலையீடுகள் இல்லாது செயற்படக்கூடிய வகையில் அமைய வேண்டும்.  மறுசீரமைப்பு பணிகளில் இருந்து விட்டுச் செல்லக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27