ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கறுப்புப் பட்டியலில் - காரணத்தைக் கூறினார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 5

24 Mar, 2023 | 03:32 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

தேசிய பாதுகாப்பு மற்றும் விமான படையின் கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்த காரணத்தால் ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார், இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும்,அரசியல் பழிவாங்களும் கிடையாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (24) இடம் பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஓய்வுப் பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்ன கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன என்று முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்,விமான படை அதிகாரிகள் உட்பட முப்படை அதிகாரிகள் பதவியில் இருக்கும் போது  தேர்தலில் வாக்களிப்பதை தவிர செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது.சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதன் பின்னர் அவர்கள் தாராளமாக செயற்பாட்டு ரீதியிலான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

ஓய்வுப் பெற்ற விமான படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்பதால் அவரை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

சம்பத் துய்யகொள்ள அண்மையில் கம்பஹா பகுதியில் இடம்பெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் தேசிய பாதுகாப்புக்கும்,விமான படையின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் விமானப்படை நிர்வாக மட்டத்தில் விசேட அவதானம் செலுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது,இதனை தொடர்ந்தே அவர் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்,இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும்,அரசியல் பழிவாங்களும் கிடையாது.

விமானப்படையின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை குறிப்பிடும் நபரை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்பது அவசியமற்றது,யாரை விமான முகாமிற்குள்,அனுமதிக்க வேண்டும்,யாருக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை  விமானப்படை தீர்மானிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55