சதி செய்கின்றன எதிர்க்கட்சிகள் - பாலித ரங்கே பண்டார

Published By: Vishnu

24 Mar, 2023 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரச்சினைகள் அற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்ட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அதனை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன. 

நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களாலேயே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் முன்னெடுப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தி தினத்தை முன்னிட்டு இன்று (24) வெள்ளிக்கிழமை ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நாடாகக் காணப்பட்ட இலங்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். 

இந்த சவாலை ஏற்பதற்கு அனைவரும் அஞ்சி ஓடிய போது , தனியொரு நபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராடி வெற்றி பெற்றுள்ளார்.

ஐ.தே.க. பொது செயலாளராக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு கையெழுத்திடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றமையை பாக்கியமாகக் கருதுகின்றேன். அவரால் நாட்டு மக்களுக்கு நிம்மதியாக சுவாசிக்கக் கூடிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்கள் , உரம் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரச்சினைகள் அற்ற நாட்டை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு தூதுவர்களை அவசரமாக சந்தித்து அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை காலம் தாழ்த்துமாறும், மேலும் கடுமையான நிபந்தனைகளை முன்வைக்க வலியுறுத்துமாறும் தூதுவர்களிடம் கோரியுள்ளன. நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12
news-image

மியன்மாரில் ஆள்கடத்தல்கும்பலிடம் சிக்கிய இலங்கையர்கள் பாதுகாப்பாக...

2023-05-29 15:51:12