இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு நிலம்' காண்பியக்கலை காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு

Published By: Nanthini

24 Mar, 2023 | 12:28 PM
image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவ. தஜேந்திரனின் புதிய கலைசார் முயற்சியான 'இன்னொரு நிலம்' காண்பியக்கலை காட்சி நிகழ்வு நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம், சங்கரத்தையில் அமைந்துள்ள துணைவிச் சந்தியில் உள்ள 'தில்லை வாசா' இல்லத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து பல கலைப் படைப்புகளை எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் கண்டுகளிக்கலாம். 

இயற்கையை கலைக்கண் கொண்டு காணத் தூண்டுகிற, ஓவியம், கவிதை, தியானம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த பரிசோதனைகள் மூலம் இனங்கண்ட, முற்றிலும் மாறுபட்ட கலையம்சம் பொருந்திய படைப்புகள், உருவங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இந்நிலையில் கலாரசிகர்கள், புதுமை விரும்பிகள், சிந்தனாவாதிகளின் கண்களுக்கு விருந்தளித்து,  சிந்தனை, கருத்துக்களுக்கு புத்தெழுச்சி  அளிக்கும் வகையில் இக்காட்சிகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right