ஆட்சியதிகாரங்களை கைப்பற்ற முயன்ற தரப்பினரது நோக்கங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது - சாந்த பண்டார 

Published By: Vishnu

23 Mar, 2023 | 09:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வங்குரோத்து அடைந்த நாடு தற்போது கட்டியெழுப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, அரசாங்கத்தை பலவீனப்படுத்தி  ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதற்கு முயற்சித்த எதிர்க்கட்சிகளின் நோக்கங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களும்; உண்மையில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

இனியாவது; நாட்டைப் பலப்படுத்துவது பற்றி சிந்தித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தனிநபர் என்ற ரீதியில் கட்சி, பேதங்களை கடந்து ஒன்றிணைய வேண்டும் என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

இன்று (23) வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளது என சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது. பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை அன்று எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

சிலர் பின்வாங்கினார்கள். இருப்பினும் எந்தவொரு நிபந்தினைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். 

அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரிவர நிறைவேற்றியுள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டினை கட்டியெழுப்ப ஜனாதிபதியினால் முடிந்துள்ளது. குழப்பங்களுக்கு மத்தியில் அன்று  பாராளுமன்றத்தில் நாம் எடுத்த தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் நன்மை கருதி முக்கியமான தீர்மானங்களை  முன்னெடுத்தோம். அதில் ஒன்று தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து  நிதியுதவி பெற்றுக்கொள்வது. நாம் அதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள்  நிறைவேற்றப்பட்டு நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியும் தற்போது கிடைக்க பெற்று இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஸ்திரத்தன்மை நிலையில் நாடு இல்லை என்பதால் நாணய நிதியத்தின் கடன் கிடைக்காது என்றார்கள். ஆனால் அந்த சவால்களை வெற்றி கொண்டுள்ளோம். நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மூச்சு விடுவதற்கு முடிந்துள்ளது. கிடைக்கப்பெற்ற நிதி கடன் என்றாலும் எமக்கு முன்னோக்கி செல்வதற்கான மாற்று பாதையாக  இதை கருதுகிறோம்.

முன்னதாக நாணய நிதியத்திடமிருந்து 16 தடவைகள் கடன்களை பெற்றுள்ளோம். ஆனால் நாடு அபிவிருத்தி அடையவில்லை என்கிறார்கள். உண்மை தான். இருப்பினும் அவற்றை கொண்டு  படிப்பினைகளை பெற்றுள்ளோம். 

அன்று  கடனுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட  திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இருப்பினும் இம்முறை ஆரம்பத்திலேயே திருத்தங்களை  மேற்கொண்டுள்ளோம். உதாரணமாக வரி திருத்தங்கள், மின் கட்டண உயர்வு என்பவற்றை குறிப்பிடலாம். இந்த தீர்மானங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் எமக்கு இன்று சாதகமான பதிலை தந்துள்ளது. 

இதேவேளை கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்துவோம். நிதி ஒழுங்குகள் சட்டமாக்கப்படும். ஊழலைத் தடுக்க புதிய சட்ட திட்டங்களை கொண்டு வருவோம். முன்னர் இல்லாதது போன்று புதியதொரு நிதி கலாச்சாரம் உருவாகும்.

எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற  நம்பிக்கை எமக்குள்ளது. பொருளாதார நெருக்கடிகளை காரணங்களை காட்டி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆட்சியதிகாரங்களை பெற்றுக் கொள்ள முயன்ற எதிர்க்கட்சிகளின்  கனவுகள் இல்லாது செய்யப்பட்டுள்ளது. 

இனியாவது நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் ஜனாதிபதிக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30