மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் நபரொருவர் இன்று வியாழக்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜிதரராஜ் என்பவரே இவ்வாறு இறந்தவராவார்.
இவர் திருப்பெருந்துறையில் இருந்து புதன்கிழமை (22) இரவு ஈச்சந்தீவு களப்பு பகுதிக்கு தோணியில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இவர் தோணியில் இருந்து இறங்கும் போது மது போதையில் வீழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்டர் போலின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM