வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 04:34 PM
image

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் நபரொருவர் இன்று வியாழக்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜிதரராஜ் என்பவரே இவ்வாறு இறந்தவராவார்.

இவர் திருப்பெருந்துறையில் இருந்து புதன்கிழமை (22) இரவு ஈச்சந்தீவு களப்பு பகுதிக்கு  தோணியில் சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் இவர் தோணியில் இருந்து இறங்கும் போது மது போதையில் வீழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

மட்டக்களப்பு  நீதிமன்ற நீதிவான் பீற்டர் போலின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர்  பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35