(எம்.மனோசித்ரா)
நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தனிகர்களுக்கும் , எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்குமிடையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களை தெளிவுபடுத்தும் முதன்மை நோக்கத்துடன் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல்,அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் , அமெரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் , பிரதி உயர்ஸ்தானிகர்கள் , வதிவிடப்பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM