கொலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் நுழைந்த ஆந்தையால் பரபரப்பு:

Published By: Sethu

23 Mar, 2023 | 04:20 PM
image

கொலை வழக்கு விசாரணை ஒன்றின்போது நீதிமன்ற அறைக்குள் ஆந்தை ஒன்று நழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவம் தென் ஆபிரிக்கவில் இடம்பெற்றுள்ளது. 

பிரக்பான் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் இந்த ஆந்தை நுழைந்தது. 

இதனால் அங்கிருந்தமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடத் தொடங்கினர். நீதிவானும் அங்கிருந்து வெளியேறினார். 

அதன்பின் ஆந்தை மீட்பு நிலையமொன்றுடன் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்தனர். 

அதையடுத்து ஆந்தைய அந்நிலைய ஊழியர்கள் மீட்டனர். 

கூரையிலுள்ள துவாரம் ஒன்றின் ஊடாக இந்த ஆந்தை நீதிமன்ற அறைக்குள் நுழைந்திருந்தது என மேற்படி ஆந்தை மீட்பு நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right