தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published By: Digital Desk 3

23 Mar, 2023 | 04:13 PM
image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கை துறைமுகங்கள் மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (23) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின்போது கடல்மணல் அகழ்வுப் பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரம், கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகளில் காணப்படும் தேக்க நிலை தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் பேருவளை மருதானை பகுதியில் இடம்பெறும் கடல்மணல் அகழ்வுப்பணியின்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் விரைவில் அதுகுறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர் மற்றும் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36