கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கை துறைமுகங்கள் மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (23) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது கடல்மணல் அகழ்வுப் பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரம், கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகளில் காணப்படும் தேக்க நிலை தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பேருவளை மருதானை பகுதியில் இடம்பெறும் கடல்மணல் அகழ்வுப்பணியின்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் விரைவில் அதுகுறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர் மற்றும் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM