ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள் ஈன்றெடுத்த மீரா!

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 02:00 PM
image

ரிதியகம உல்லாசப்  பூங்காவில் உள்ள  'மீரா' என்ற பெண் சிங்கம்  கடந்த 18 ஆம் திகதி  4 குட்டிகளை ஈன்றுள்ளது.    

இந்த நான்கு குட்டிகளில் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியத்துடன்  உள்ளதாகவும் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியம் இன்மை காரணமாக  அதன் தாயினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரிதியகம உல்லாச  பூங்காவின் பராமரிப்பாளரான கால்நடை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த அமரசேன தெரிவித்தார். 

நான்கு குட்டிகளை ஈன்றெடுத்த தாய் சிங்கம் சுமார் 5 வயதுடையது  எனவும், அதுவும் ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்தது எனவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

பிரசவத்தின்போது பலவீனமான  குட்டிகள் தாயால் நிராகரிக்கப்படுவதாக  அமரசேன கூறியுள்ளார்.

"தற்போது ரிதியகம உல்லாச  பூங்காவில் சுமார் 20 சிங்கங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 10 சிங்கங்கள்  இந்தப்  பூங்காவிலேயே பிறந்தவை  ஏனையவை சீனா, ஜெர்மனி மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35