(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு ஆரம்பக்கட்ட படிக்கல்லாக உள்ளது. நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆகவே ஒரு சிறந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தின் ஊடாக எடுக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாரிய போராட்டத்துக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வரிச்சலுகை வழங்கியமை, உரம் தடை செய்தமை ஆகிய காரணிகளினால் பொருளாதார பாதிப்பு குறுகிய காலத்திற்குள் தீவிரமடைந்துள்ளது.தற்போது அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றிணைந்துள்ள காரணத்தால் உண்மையை மறைக்க முடியாது.
கடந்த காலத்தை பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தால் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தூரநோக்கு கொள்கையுடன் செயற்பட வேண்டும். சர்வதேச நாணய ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு ஆரம்பக்கட்ட படிக்கல்லாக அமையும்.
இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது பொருளாதார பாதிப்பு ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்ட பின்னணியில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் 2020 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்ததன் பின்னர்,நாடு வங்குரோத்து என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பான நிபந்தனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு நிபந்தனை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் வெளிப்படை தன்மையுடுன் செயற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கை பாராளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கமற்ற வகையில் செயற்பட வேண்டும், ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM