நிதி முகாமைத்துவம், பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - சர்வதேச நாணய நிதியம்

Published By: Vishnu

22 Mar, 2023 | 12:51 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை அரசாங்கம் நிதி முகாமைத்துவம் மற்றும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடன் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன் போதே இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னணியை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் மதிப்பீடு செய்துள்ளமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதி முகாமைத்துவம் மற்றும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினர்.

கடந்த காலங்களில் என்ன தவறுகள் நடந்தன என்பதில் கவனம் செலுத்துவதை விட புதிய சீர்திருத்த திட்டங்களில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும், பல்வேறு துறைகளில் காணப்படும் சவால்களுக்கும் சீர்திருத்தங்களில் முன்னுரிமைக்கும் சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய ஆதரவு குறித்த ஆராய்ந்து பார்ப்பது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு இந்தப் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியமானது என குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி மறுசீரமைப்பு துறைகள் முக்கியமானது என்றும் அதற்கமைய நிதி முகாமைத்துவத் துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வாய்ப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டனர்.

இப்பணியில் நேரடியாகப் பங்களிக்கும் அரசு நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து ஆராய்ந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்காலத்தில் இவ்வாறான கூட்டங்களை கூட்டுவதன் முக்கியத்துவத்தையும், இந்த செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் அர்ப்பணிப்பின் அவசியத்தையும் சாகல ரத்நாயக்க மேலும் விளக்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51