logo

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவு - அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அறிக்கை

Published By: Vishnu

21 Mar, 2023 | 07:52 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்களவிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கெனால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பொலிஸாரும் பாதுகாப்புத்தரப்பினரும் பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றம், தொடர்ச்சியான மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளடங்கலாகக் கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த ஆண்டு மார்ச் - ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டில் அமைதியின்மை நிலவியதாகவும், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களின் பதவி விலகலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று சட்டவிரோதப்படுகொலைகள், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகள், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற சிறைச்சாலை நிலைவரம், தன்னிச்சையான கைதுகளும் தடுத்துவைப்புக்களும், நீதிமன்ற சுயாதீனத்தன்மையுடன் தொடர்புடைய பிரச்சினைகள், கருத்துவெளிப்பாடு மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான மட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மீதான இடையூறுகள், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பான கட்டுப்பாடுகள், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பில் போதியளவு விசாரணைகள் இன்மை, இன-மத சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் கடந்த ஆண்டு இலங்கையில் பதிவாகியிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இம்மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொண்டது என்றும், இவற்றைப் பொறுத்தமட்டில் குறிப்பாக தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்கின்றது என்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த ஆண்டு மேமாதம் 9 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதிப்போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27