(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை. தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
உள்ளுராட்சி மன்றங்கள் அரச அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மாநகர சபை ஆணையாளர்களிடமும், பிரதேச சபை செயலாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தரப்பினரால் முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன ஒருபோதும் வலியுறுத்தவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவாக நடத்தப்பட வேண்டும்என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள்.
தேர்தல் இடம்பெற்றால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும்.தேர்தலை பிற்போடும் நோக்கம் எமக்கு கிடையாது.யாருக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM