கோமரங்கடவல, கிரிந்த பகுதிகளில் நில அதிர்வுகள் : மக்கள் அச்சமடைய வேண்டாம் - புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்

Published By: Nanthini

19 Mar, 2023 | 07:27 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேசம் மற்றும் கிரிந்த, பலதுபான பகுதியில் இரு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

திருகோணமலை - திம்பிரிவெவ, கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

அப்பகுதியில் 3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (18) சனிக்கிழமை மாலை 6.46 மணியளவில் கிரிந்த - பலதுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 2.6 ரிச்டராக பதிவாகியுள்ளது.

இந்த இரு பகுதிகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அவை நாட்டின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தகட்டோட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டோட்டுக்கும் இடையில் நேற்று பகல் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

இலங்கையில் இயங்கிவரும் 4 நில அதிர்வு அளவீடுகளும் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்துள்ளது.  

நிலநடுக்கங்கள் இலங்கையில் அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டோட்டுக்கும் அதற்கு மேல் அமைந்துள்ள ஆசிய தட்டோட்டுக்கும் இடையிலான எல்லையில் 4-5 ரிச்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள நில அதிர்வுகள் குறித்து  கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களின் ரிச்டர் அளவினை நோக்கும்போது கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் 4க்கும் குறைவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், பாரியளவிலான நில நடுக்கங்களை எதிர்பார்க்க முடியாது. 

ஆனால், 2, 2.5 அல்லது  3, 3.5 போன்ற சிறிய நில அதிர்வுகள் இடம்பெறலாம் என்றார்.

இன்றும், நேற்றும் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களுக்கு மேலதிகமாக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் பல இடங்களில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன்...

2023-03-28 14:15:37
news-image

சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம்...

2023-03-28 14:16:44
news-image

கட்டுநாயக்கவில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகள்...

2023-03-28 19:45:08
news-image

17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா...

2023-03-28 19:40:05
news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03