(எம்.வை.எம்.சியாம்)
கம்பஹா, சீதுவ பிரதேசத்தில் வேன் ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (18) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீதுவ - கொட்டகொட பிரதான வீதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் கொட்டகொடவில் இருந்து சீதுவ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் எதிர்த்திசையில் வந்த துவிச்சக்கரவண்டியின் மீது நேருக்கு நேர் மோதியே விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை, மகன் இருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 45 வயதுடைய தந்தை மற்றும் 14 வயதுடைய அவரது மகனும் ரத்தொழுவ, சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை விபத்தோடு தொடர்புடைய சந்தேக நபரான வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM