கட்சி செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து உத்தியோகபூர்வ தீர்மானம் அறிவிக்கப்படும் - நிமல் புஞ்சிஹேவா

Published By: Nanthini

19 Mar, 2023 | 04:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரசியல் கட்சி செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாக இருந்தாலும், அதற்கு சகல நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

ஆனால், தற்போது அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு சிக்கலாக காணப்படுகிறது. அனைத்து செயற்பாடுகளையும் ஆணைக்குழு அவதானித்து வருகிறது.

சுயாதீனம் என்பதற்காக ஆணைக்குழுவினால் தனித்து தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்த சகல தரப்பினரின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. 

தேர்தல் நடவடிக்கைகளுக்கு நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை (23) சகல அரசியல் கட்சி செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

அரசியல் கட்சி செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும்.

சட்டத்தின் பிரகாரம், தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நிதி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

நிதி வழங்காமல் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என அரச அச்சக திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பை நடத்த வேண்டுமாயின், தபால்மூல வாக்குச்சீட்டுக்களும் எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம்...

2023-03-28 14:16:44
news-image

கட்டுநாயக்கவில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகள்...

2023-03-28 19:45:08
news-image

17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா...

2023-03-28 19:40:05
news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03
news-image

இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து...

2023-03-28 16:50:14