போலியான விமர்சனங்களுக்கு இடமில்லை; மக்கள் என் பக்கம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Published By: Vishnu

19 Mar, 2023 | 04:11 PM
image

(செய்திப்பிரிவு)

'ஊழல் ஒழிப்பு... ஊழல் ஒழிப்பு...' என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

பேருந்துகள் வழங்க எவ்வாறு நிதி கிடைக்கின்றது? அந்த வழிமுறையை சொன்னால் சிறப்பாக இருக்குமென பாராளுமன்றத்தில் கூறிய கருத்தால் சிலருக்கு தொடை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதனால் தான் கைக்கூலிகள் மூலம் கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. இப்படியானவர்களின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. மக்கள் அவற்றை நம்பப் போவதுமில்லை. ஏனெனில், மக்கள் என் பக்கம் உள்ளார்கள்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் எல்லா வேலைத்திட்டங்களையும் எதிர்த்தால் தான் அது எதிர்க்கட்சி என நினைத்துக்கொண்டு பிரதான எதிர்க்கட்சி செயற்படுகின்றது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை குழப்பும் நோக்கில் 'ஊழல்' முத்திரை குத்தப்பட்டு வருகின்றது.

தேர்தல் காலம் வந்தால்போதும், அலசி ஆராயாமல் கூட எடுத்த எடுப்பிலேயே ஊழல், ஊழல் என கோஷம் எழுப்புகின்றனர்.

ஆனால், தாங்கள் எதையாவது செய்துவிட்டால் அது சேவை என்ற போர்வையில் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சியால் பாடசாலைகளுக்கு பஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பஸ்ஸின் விலை 5 மில்லியன் ரூபா என கூறப்படுகின்றது.

இதுவரை 47 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படியானால் 235 மில்லியன் ரூபா எங்கிருந்து வந்தது? மரத்தில் இருந்து பறித்தார்களா? வந்த வழியைத்தான் கேட்டேன். ஏனெனில், அவர்கள் வெளிப்படைத் தன்மை பற்றி கதைப்பவர்கள். எனவேதான் பஸ் விடயத்திலும் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியுள்ளேன்.

'ஊழல் ஒழிப்பு... ஊழல் ஒழிப்பு...' என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03
news-image

இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து...

2023-03-28 16:50:14
news-image

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்...

2023-03-28 16:42:40
news-image

பசுமை வாய்ப்புக்களூடாக தற்போதைய நிலையிலிருந்து இலங்கையை...

2023-03-28 16:20:09
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்...

2023-03-28 16:12:44