அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது - வீரசுமன வீரசிங்க

Published By: Vishnu

19 Mar, 2023 | 09:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு சார்பாகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது. வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு எடுத்த தீர்மானங்கள் அரச நிறுவனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது என இலங்கை கம்யூனிசக் கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறாது, தேர்தலுக்கான புதிய திகதி நியமிப்பதும், வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு நிதி கிடைக்கவில்லை. ஆகவே வாக்குச்சீட்டுக்களை வழங்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் குறிப்பிடுவதும்,பின்னர் தேர்தல் பிற்போடப்படுவதும் வழக்கமாகி விட்டது 

நாட்டு மக்களின் தேர்தல் உரிமை  கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு சார்பாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது, ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மந்தகதியில் காணப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரங்கள் கடந்த செப்டெம்பர் மாதம் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டது, ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த  டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை முன்னெடுத்தது.

வாக்கெடுப்பை நடத்துவதற்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அரச நிறுவனங்கள் செயற்படுத்த மறுக்கின்றன. தூரநோக்கமற்ற தீர்மானங்களினால் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடையும், என்பதால் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்படுகிறது. இரண்டு அரசியல் கட்சிகளுக்காக நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை மலினப்படுத்துவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம்...

2023-03-28 14:16:44
news-image

கட்டுநாயக்கவில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகள்...

2023-03-28 19:45:08
news-image

17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா...

2023-03-28 19:40:05
news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03
news-image

இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து...

2023-03-28 16:50:14