நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும். அக்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரணமாகவும் சற்றே மிதமான அலையுடனும் காணப்படலாம்.
அதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறிப்பிட்ட அப்பிரதேசங்களில் உள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலமான காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM