வவுனியா கற்குழி பகுதியில் நேற்று இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
குறித்த வாள் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை வீடு திரும்பியதையறிந்த சிலர் இரவு 9.50 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியவரை தாக்க முயன்றுள்ளனர்.
குறித்த வீட்டார் குக்கூரலிட்டு சத்தமிட்டமையினால் முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் வாவுனியா பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM