பணிச்சுமையின் காரணமாக எம்மில் பெரும்பாலானவர்களுக்கும் கழுத்து வலி, முதுகு வலி என்பது இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு கட்டாய பரிபூரண ஓய்வெடுத்தால், வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
அதே தருணத்தில் காலையில் எழுந்தவுடன் கீழ்ப்பக்க முதுகு வலி, விடியற்காலையில் பின்பக்க பகுதியில் வலி ஏற்பட்டால்... அவை முதுகுத்தண்டு வீக்கப் பாதிப்பின் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
கடந்த தசாப்தங்களில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் இத்தகைய பாதிப்பு அதிகம் என்று அறிவறிக்கை தெரிவித்தாலும், தற்போதைய சூழலில் இளம் வயது மற்றும் மத்திம வயதுள்ள ஆண், பெண் என இருவருக்கும் இத்தகைய முதுகுத்தண்டு வீக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் போது எக்ஸ் ரே, ஸ்கேன், இரத்த பரிசோதனை போன்றவற்றின் மூலம் முதுகுத்தண்டு வீக்கப் பாதிப்பு, ஒக்ஸியல் ஸ்போண்டிலோஒர்தரைடீஸா அல்லது ரேடியோகிறாஃபிக் ஒக்ஸியல் ஸ்போண்டிலோஒர்தரைடீஸா என்பதனை அறிந்து, அதற்கேற்ற நிவாரண சிகிச்சைகளை வழங்குவர்.
இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளை உடனடியாக அவதானித்து சிகிச்சை பெறாவிட்டால், இதன் காரணமாக கண் வீக்கம், இதய பாதிப்பு, முதுகுத்தண்டு எலும்பு முறிவு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
டொக்டர்: ஷாம்
தொகுப்பு: அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM