(ஏ.என்.ஐ)
மக்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு பொது நலத் திட்டங்களை ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியானது சாதகமான முடிவுகளைக் காட்டி வருவதுடன், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டங்கள் உள்ளூர் மட்டத்தில் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக வரவேற்கப்படுகின்றன.
மேலும், இத்திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மக்கள் சந்திப்புகள் கோகர்நாக் தொகுதியின் பின்தங்கிய மற்றும் மலைப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக, குஜ்ஜார் சமூகத்தினர், தங்கள் வருகையை உறுதிசெய்து, தமது கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அதற்கு திட்ட நிர்வாக அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வைலூ, சிங்கபுரா சுரங்கப்பாதை அமைப்பதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டால், அச்சந்தர்ப்பங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; இது ஏழைகளுக்கான வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் அப்பகுதியில் மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததுடன் சீரற்ற சாலைகளும் காணப்படுகின்றன.
எனவே, தற்போதுள்ள சாலைகளை சீரமைத்து, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்து, மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகபட்சம், ஆறு மாதங்களுக்கு இப்பகுதியில் மின்சாரம் வழங்கப்படுகிறது. குளிர்காலத்தில், குறிப்பாக பனி நாட்களில் மின்சாரம் இருக்காது. ஆனாலும், மக்களிடம் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிவித்தனர்.
பொதுமக்களின் இத்தகைய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM