(ஏ.என்.ஐ)
இந்திய கல்வி அமைச்சின் கீழ் ஜி-20 கல்வி பணிக்குழுவின் பிரதிநிதிகளால் ஒருங்கமைப்பில் மார்ச் 15, 16, 17ஆம் திகதிகளில் மூன்றுநாள் கருத்தரங்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் கல்சா கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, 'ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது சமத்துவ வளர்ச்சிக்காக நாடுகளுக்கு இடையே பாலங்கள் கட்டுவதில் கவனம் செலுத்தி, அது தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விவாதித்துள்ளனர்.
அத்தோடு இக்கருத்தரங்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை வடிவமைப்பதற்காக அரசு-கல்வித்துறை-தொழில்துறை இணைப்புகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், இந்த கருத்தரங்கில் உயர்கல்வி செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ரோபர், பேராசிரியர் ராஜீவ் அஹுஜா ஆகியோர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பேராசிரியர் அனில் குப்தா, பேராசிரியர் ராஜீவ் அஹுஜா தலைமையில், 'வளர்ந்து வரும், சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் துறையில் ஆராய்ச்சி - 4.0' என்ற தலைப்பில் முதல் கருத்தரங்கு இடம்பெற்றது.
மேலும், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகள், கல்வி முறைகள் மற்றும் பொதுவாக சமூகத்தில் அவற்றின் தாக்கத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பங்குதாரர்களின் பங்கு பற்றிய நுண்ணறிவை இதன்போது பகிர்ந்துகொண்டனர்.
அத்தோடு சீனா, ஓமன், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு உறுப்பினர்களுடன் பேராசிரியர் ஷாலினி பாரத் தலைமையில் 'நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஆராய்ச்சி' என்ற இரண்டாவது கருத்தரங்கு இடம்பெற்றது.
இதில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM