விமானப்படையின் சிறப்பு விருது வழங்கல் நிகழ்வானது கடந்த மார்ச் 15ஆம் திகதி புதன்கிழமை கட்டுநாயக்க விமானப்படை ஈகிள் லகூன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை விமானப்படையின் முன்னேற்றத்துக்காக ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தமது தொழிலுக்கு அப்பாற்பட்ட திறன்களை வெளிப்படுத்தி வரும் சிறந்த விமானப்படை வீர, வீராங்கனைகளை அங்கீகரிப்பதற்காக வருடந்தோறும் விருது வழங்கல் நிகழ்வு நடத்தப்படும்.
விமானப்படையின் ஒவ்வொரு தொழில் பிரிவில் சிறந்த விமானப்படை வீரர் தெரிவாகி, அப்பிரிவின் பணிப்பக குழுவின் மேற்பார்வையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறையின்படி ஒரு வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பின்னர், பரிந்துரைகளின்படி, அதிக புள்ளிகளை பெறும் விமானப்படை வீரர் மற்றும் விமானப்படை வீராங்கனை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை வீரராக சீனக்குடா விமானப்படை கல்வி பீடத்தின் இல.01 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் கடமையாற்றும் வாரென்ட் அதிகாரி ப்ரியங்கர தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த விமானப்படை வீராங்கனையாக கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் அதிகாரிகள் உணவகத்தின் உதவியாளராக கடமையாற்றும் கோப்ரல் லக்ஷிகா தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும், குழுக்களுக்கான பிரிவில், சிறந்த சூழ்நிலை கட்டுப்பாட்டு அணியாக 'தியத்தலாவ' விமானப்படைத்தளமும், சிறந்த சுற்றாடல் முகாமைத்துவ திட்ட குழுவாக 'பாலாவி' விமானப்படைத்தளமும், சிறந்த ஆய்வுக் குழுவாக 'மிஹிரிகம' விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவும் விருதுகளை பெற்றதுடன், சிறந்த விமானப்படை வீர, வீராங்கனைகளுக்கான பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி, விமானப்படையின் பணிப்பக அதிகாரிகள், விமானப்படையின் ஏனைய அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM