மூன்றாம் பாலின பிரதிநிதிகளை உட்சேர்ப்பது தொடர்பில் ஜனாதிபதியோடு பேசுகிறேன் - வட மாகாண ஆளுநர்

Published By: Nanthini

16 Mar, 2023 | 12:49 PM
image

ட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறேன் என  ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கலாசார மண்டபத்தில் நேற்று (15) புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வில் மூன்றாம் பாலினத்தினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

வட மாகாண மகளிர் விவகார அமைச்சும் இந்தியா தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழாவில் வட மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இதன்போது விழா மேடையில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆளுநரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததோடு, மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

அத்தோடு மூன்றாம் பாலினத்தவர்கள் பொது போக்குவரத்து, அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு மூன்றாம் பாலினத்தவர்களின் பிரதிநிதிகளையும்  மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி கலந்துரையாடல்களில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஆளுநரிடம் வினவியபோது, 

மூன்றாம் பாலினத்தவர்களின் கோரிக்கை குறித்து  கரிசனை கொண்டுள்ளேன். அவர்கள் தமக்கான கோரிக்கையை மட்டுமல்ல, இலங்கை முழுவதும் உள்ளவர்களின் பிரச்சினைகள் சார்ந்தும் அறிவித்துள்ளனர்.

மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் தமது பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள  வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக  ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51