'பதான்' படத்தின் மூலம் பொலிவுட் திரையுலகின் வணிக சந்தையை தனியொருவனாக மீட்டெடுத்திருக்கும் 'பொலிவுட் பாட்ஷா' ஷாரூக் கான் நடிப்பில் தயாராகி வரும் 'ஜவான்' திரைப்படம், ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்', ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி இயக்கத்தில் தயாராகும் முதல் ஹிந்தி திரைப்படம் 'ஜவான்'.
இதில் பொலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, சுனில் குரோவர், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக ஷாருக்கான் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். விஜய்- அவரது தந்தையும், இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'சுக்ரன்', 'பந்தயம்' ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே சிறப்பு தோற்றத்திலும், கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.
இதன் பிறகு அவர் நண்பரும், இயக்குநருமான அட்லி இயக்கத்தில் தயாராகி வரும் 'ஜவான்' எனும் இந்தப் படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் விஜய் 15 முதல் 20 நிமிடங்கள் வரையிலான இடம்பெறும் காட்சியில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் விஜயின் சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'ஜவான்' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
'ஜவான்' திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானின் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்பதும், இப்படத்தில் வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும், பிரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான் என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பதும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.
இதனிடையே எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் திகதியன்று தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'ஜவான்' திரைப்படம், தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என இந்திய மொழிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM