4 ஆண்டுகள் கழித்து வெளியானது 'கிரிவெசிபுர' : கண்டி இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னனின் கதை! 

Published By: Nanthini

17 Mar, 2023 | 03:03 PM
image

லங்கையின் சினிமா வரலாற்றிலேயே மாபெரும் பொருட்செலவில், காட்சியமைப்பில் உருவாகியுள்ள 'கிரிவெசிபுர' சரித்திர திரைக்காவியம் நான்காண்டு கால கடும் முயற்சியின் பின்னர் நேற்று முன்தினம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. 

கண்டி இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் அரச வரலாற்றை அடியொற்றி படைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தேவிந்த கோங்ககே இயக்கியுள்ளார். 

'2023 சினிமா அபிமான' திரைப்பட விழாவில் நேற்று முன்தினம் 'கிரிவெசிபுர' சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட நிகழ்வில் படக்குழுவினரும் கலந்துகொண்டு, இந்த படத்துடனான நான்காண்டு கால பயணம் தொடர்பான தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

அதேவேளை இந்தப் படம் வெளியான அன்று இலங்கையில் உள்ள 16 திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு, திரையரங்கங்களில் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உப தலைப்புகளோடும் படம் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள திரைப்பட கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். 

அத்துடன் இந்தியாவின் தமிழ் பேசும் தெலுங்கு நாயக்க மன்னரை பற்றிய கதை என்பதால் இலங்கை கடந்து இந்திய அளவிலும் இப்படம் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் எல்றோய் அமலதாஸ், நிரஞ்சனி சண்முகராஜா, நவயுகா குகராஜா, ஜூலியானா போன்றோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். 

பொ.ஆ. 1780 – 1832 காலப்பகுதியில் வாழ்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் பொ.ஆ. 1798 முதல் 1815 வரை கண்டி ஆட்சியில் கோலோச்சிய கடைசி மன்னனாக அறியப்படுகிறார். 

மதுரை நாயக்கர் வம்சத்தினரான இவரது இயற்பெயர் கண்ணுசாமி. 

அவருக்கு முன்பு கண்டி இராச்சியத்தை ஆண்டுவந்த நாயக்க வம்ச மன்னனான ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு ஐந்து மனைவிகள் இருந்தும், ஒரு வாரிசு இல்லாத நிலையில் இறந்துவிட்டார். 

அடுத்த மன்னன் யார் என்கிற போட்டியும் சதியும் உருவாகத் தொடங்கிய நிலையில் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமி மதுரையிலிருந்து அழைத்துவரப்பட்டு 1798ஆம் ஆண்டு கண்டி அரசுக்குரிய அரசனாக முடிசூட்டப்பட்டார். 

கண்ணுசாமி, பதவி காரணமாக ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் என்கிற அரச நாமத்தை பெற்றார். 

பிரித்தானியரின் வருகையாலும் ராஜதந்திர திட்டங்களாலும் கண்டி இராச்சியம் கைமாறியது.

பொ.ஆ. 1815ஆம் ஆண்டு கண்டி போரில் பிரித்தானியரிடம் தோல்வியுற்ற மன்னன் நாடு கடத்தப்பட்டு, வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், 1832 ஜனவரி 30 அன்று தனது 52 வயதில் மரணத்தை தழுவினார். 

அவரது ஆட்சிக் காலத்தில் சூழ்ந்திருந்த சதிகள், துரோகங்கள், தோல்விகள், ஆக்கிரமிப்புகள், ஏமாற்றங்கள், துயரங்கள், வலிகளையே 'கிரிவெசிபுர' படம் எடுத்துக்காட்டுகிறது. 

தமிழ் பரம்பரை மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் சிங்கள மன்னனாக வாழ்ந்து அரச கருமமாற்றி, மறைந்தான் என்பதற்கான ஆதாரக்  குறிப்புகள் உள்ள போதும் அந்த உண்மையை ஏற்க சிலர் தயாராக இல்லை என்பது மேலதிக நினைவூட்டல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57