பனாகொடை இராணுவ முகாமின் பிட்டிபன பாதுகாப்பு தளத்திலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்களை திருடியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக கூறப்படும் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM