இங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய நுண்கலை கூடத்தால் சாஸ்வதம் ‘பிரவாஹா 2023’ நிகழ்வு பாரதிய வித்திய பவன் லண்டனில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வெறு நாட்டு திறமைமிக்க நடன கலைஞர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். சலங்கை நர்த்தனாலய நுண்கலை கூடத்தின் நிறுவனர் குரு. கலாநிதி. ஜெயந்தி யோகராஜா, இணை நிறுவனர் ஸ்ரீமதி. பவித்திரா சிவயோகம், குழு உறுப்பினர்கள் சங்கியா யோகராஜா, ரூபேஷ் ஆகியோரால் நடத்தப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. சிறப்பு நடன கலைஞர்களாக செல்வி. காவியா முரளிதரன், செல்வி. சங்கியா யோகராஜா, திரு.சொரூப் மேனன், திரு. ரூபேஷ், கலாநிதி ஜெயந்தி யோகராஜா ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.
வரவேற்பு நடனத்தை சங்கியா, ரூபேஷ் வளங்கியிருந்தனர். இவர்களுடன் ஸ்ரீமதி சித்திரா முரளிதரன், ஸ்ரீமதி. மின்னல் பிரபு, ஸ்ரீமதி . அனனியா ஐங்கரன், ஸ்ரீமதி . சுஜந்தினி அரவிந்தன், ஸ்ரீமதி . கஜபிரியா ராஜ்மன், ஸ்ரீமதி. பபிதா ஜெயபாலன், ஸ்ரீமதி.சந்திரிகா ஜெயகாந்தன், ஸ்ரீமதி. மீரா வினாயகா கிருஷ்ணன், செல்வி. சங்கியா யோகராஜா, ஸ்ரீமதி. றிஷாந்தினி சஞ்சீவன், ஸ்ரீ. அமர்நாத் கோஷ் ஆகியோர்களின் மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறப்பு விருந்தினராக மலேஷியாவிலிருந்து வருகைதந்த குரு ஸ்ரீ கணேஷினுக்கு ‘கலா போஷிகா’ எனும் விருதை குரு. கலாநிதி ஜெயந்தி யோகராஜா வளங்கி கொளைவித்தார். முக்கிய விருந்தினர்களாக நடன ஆசிரியர்களான ஸ்ரீமதி ராகினி ராஜகோபால், ஸ்ரீமதி பாமினி சித்தரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். மண்டபம் நிறைந்த ரசிகர்களின் முன் மிகவும் நேர்த்தியான முறையில் சாஸ்வதம் ‘பிரவாஹா 2023’ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM