மட்டக்களப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தபால்திணைக்களம் ஆசிரியர் சங்கங்கள் வங்கி ஊழியர்கள் இன்று புதன்கிழமை (15) ஒருநாள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலைகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் ஆசிரியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் 8 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலைகள் திறந்திருந்த போதும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தராததையடுத்து பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
அதேவேளை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பையடுத்து வெளிநோயாளர் பிரிவு முற்றிலும் ஸ்தம்பிதமடைந்ததுடன் சத்திரசிகிச்சை மற்றும் ஏனைய பிரிவு இயங்கி வருகின்றது.
மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்கள் யாவும் மூடப்பட்டு செயலிழந்ததுடன் தனியர் வங்கிகளை தவிர ஏனைய வங்கி நடவடிக்கைகளும் செயலிழந்ததுடன் காந்தி பூங்காவின் முன்னால் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM