மாகாண ஆளுநர்களிடம் பிரதமர் தினேஷின் வலியுறுத்தல்

Published By: Digital Desk 5

15 Mar, 2023 | 03:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாநகர ஆணையாளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் மாகாண ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவடைந்ததன் பின்னர் மன்றங்களின் நிர்வாகங்களை விசேட ஆணையாளர்களின் கீழ் பொறுப்பாக்கியதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு தெளிவுப்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

காலி மாவட்டம் எல்பிடிய உள்ளூராட்சிமன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

இதற்கமைய மாநகர சபைகளின் நிர்வாகம் நகர ஆணையாளர்களிடமும்,நகர சபை,பிரதேச சபைகளின் நிர்வாகம் பிரதேச சபை செயலாளர்களிடம் பொறுப்பாக்கப்படும்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் செயற்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்ற நிர்வாக கட்டமைப்பு அத்தியாவசியமானது, ஆகவே மக்களுக்கான சேவையை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக செயற்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன சகல மாகாண ஆளுநர்களிடம் வலியுறுத்தினார்.

மாநகர ஆணையா ளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் சகல ஆளுநர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உறுப்பினர்கள் வசமுள்ள அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் அனைத்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் உரிய அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்களை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவார்களாயின் அது சட்டவிரோத செயற்பாடாக கருதப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24