நியாயமற்ற வரிக்கொள்கை, மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்டத்திலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் இயங்கியது. வெளிநோயாளர் பிரிவு மற்றும் க்ளீனிக் இயங்காது இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகளும் அசௌகரியங்களுக்குள்ளாகிய நிலையில் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக புத்தளம் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் அரச சார்ப்பற்ற வங்கிகளின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் வங்கிகள் மூடப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்ததுடன், பொதுமக்கள் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
புத்தளம் நகரிலுள்ள பிரதான தபால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வாழ்க்கைச் சுமை, அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM