இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இரு தரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் இணைந்து செயற்படவேண்டும் எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகிரங்ககடிதமொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் தங்களிற்குள் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் இதன் மூலம் வங்குரோத்து நிலையில் சிக்குண்டுள்ள நாடு அதிலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்டநிலையை உருவாக்கவேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா சீனா பாரிஸ்கிளப் ஆகியன உத்தரவாதம் வழங்கியுள்ள நிலையில் மார்ச் 20 திகதி சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபை இலங்கைக்கான கடன் உதவிக்கு அங்கீகாரத்தை வழங்கும் என இலங்கை எதிர்பார்க்கின்றது.
இன்னமும் செய்துமுடிக்கப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என ரணில்விக்கிரமசிங்க தனது பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எங்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் உத்தியோகபூர்வ இருதரப்புகடன் வழங்குநர்களின் ஒருங்கிணைப்பை தொடர்ந்தும்பேணுமாறும் விஸ்தரிக்குமாறும் வலுப்படுத்துமாறும் நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி தனது பகிரங்ககடித்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எங்களின் கடன் நெருக்கடிக்கான தீர்வை காண்பதற்கு வெளிப்படையான சமமான திறமையான நடைமுறைப்படுத்தல்களை சாத்தியமாக்குவதற்கு இதுவே சிறந்த வழி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்காக நான் எங்களின் பாரிஸ்கழக சகாக்களை குறிப்பாக ஜப்பானை இந்தியா சீனா ஆகிய எங்களின் இரு தரப்பு கடன்வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்பை வளர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM