10 அலுவலக ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன

Published By: Digital Desk 3

15 Mar, 2023 | 10:46 AM
image

இன்று (15) காலை 10 அலுவலக ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று புதன்கிழமை காலை 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு டோக்கன் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்ட போதிலும், பயணிகளின் வசதிக்காக, இன்றைய அட்டவணையில் 13 அலுவலக ரயில் சேவைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்று நேற்று இரவு (மார்ச் 14) அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கனேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம, மற்றும் களுத்துறை-தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

30க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டணி (PTUA) இன்று 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டண உயர்வு, நியாயமற்ற வரிக் கொள்கை திருத்தம் உள்ளிட்ட மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிராக மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவம், வங்கி, தபால், துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுட்டுள்ளன..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42