கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளியுங்கள் - அரசாங்கம்

Published By: Vishnu

14 Mar, 2023 | 04:07 PM
image

(எம்.மனோசித்ரா)

கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும். 

எவ்வாறிருப்பினும் காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க ஒருபோதும் தயாராக இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸாரினால் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சந்தேகம் காணப்படின் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும். காலாவதியான விஷத் தன்மையுடைய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை.

எனவே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் காணப்பட்டால், குறித்த சாட்சிகளுடன் சென்று பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தால் அது தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

பாதுகாப்புதுறையினரின் சில செயற்பாடுகள் தொடர்பில் எம் அனைவருக்கும் முழுமையான தெளிவு கிடையாது. கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத பொலிஸாரும் எமது நாட்டில் காணப்பட்டனர். இவை தொடர்பிலும் இன்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36