ஜனவரி 8ம் திகதிக்குள் இருபதாயிரம் வேலைவாய்ப்புகள்: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

Published By: Devika

04 Jan, 2017 | 11:25 AM
image

நாட்டின் தேசியக் கடன் சுமையானது எதிர்கால சந்ததி மீது சுமத்தப்படாது என்றும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அத்திவாரம் இடப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குளியாப்பிட்டியவில் வாகன உற்பத்திச் சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் பேசியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசாங்கம் ஜனவரி 8ஆம் திகதியளவில் நாடளாவிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளது. இதன்மூலம் சுமார் இருபதாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. என்றாலும் நானோ, ஜனாதிபதியோ இந்த எண்ணிக்கையால் திருப்தியடையப்போவதில்லை. மேலும் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க நாம் விரும்புகின்றோம்.

“இதற்காக ஜனாதிபதியும் நானும் உலக நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்யவுள்ளோம். எமது விஜயத்தின்போது பல்வேறு முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். அதன்படி மேலும் பல வேலைவாய்ப்புகளை நம் நாட்டு மக்களுக்கு உருவாக்கித் தர எண்ணியுள்ளோம்.

“தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எமது அன்னிய செலாவணி போதுமானதாக இல்லை. எனவே, அதை அதிகரிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம். அதற்கு அடிப்படையாக விளங்கும் உற்பத்தித் துறையையும் சுற்றுலாத் துறையையும் நாம் மேம்படுத்த வேண்டும்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42